தீவிரமான நடவடிக்கை தேவை

கொரோனா ஒரு உலகளாவிய தொற்று நோய் எனவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், "சீனாவுக்கு வெளியே கொரோனாவின் பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் 13 மடங்கு அதிகரித்துள்ளது," என்றார்.